வேலூர், டிச. 29- வேலூர் மாநகர மக்க ளின் அடிப்படை தேவை யான கழிவுநீர் கால்வாய்கள் முறையாக பராமரிக்க வேண்டியும், குண்டும் குழியுமாக உள்ள காட்பாடி, பெங்களூர் சாலைகளை சீரமைத்து கொடுக்க வேண்டும், சாலைகளில் தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்ற நிரந்தர நடவடிக்கை எடுக்கக் கோரி யும் ஆற்காடு சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் 40 வருடத்திற்கு மேலாக இருந்த சிஎம்சி மருத்துவமனை ஊழியர் சங்க பெயர் பலகை, ஆட்டோ, டாக்சி தொழிற் சங்க பெயர் பலகைகள் ஜேசிபி வைத்து உடைத் தெறிந்து தொழிலாளர் மத்தியில் தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வேலூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் சிஐடியு சார்பில் அண்ணா கலை யரங்கம் அருகில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் டி.முரளி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன் துவக்கி வைத்தார். மாநிலக்குழு உறுப்பினர் எம்.பி.ராமச் சந்திரன் நிறைவு செய்து பேசினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் எம்.காசி, வி.நாகேந்திரன், எஸ்.செல்வி, ஏ.குப்பு உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.