districts

img

யூகால் தொழிற்சாலை சட்டவிரோத கதவடைப்பு சிஐடியு ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, ஜூன் 6-

    யூகால் தொழிற்சாலையின் சட்டவிரோத கதவடைப்பை கண்டித்து தொழிலாளர் நலத்துறை அலுவகம் முன்பு சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    புதுச்சேரி மேட்டுப்பாளையம் தொழிற் பேட்டையில் யூகால் தொழிற்சாலை உள்ளது. இந்நிலையில் நிர்வாகம் திடீரென தொழிற்சாலையை மூடிவிட்டது. இந்நிலையில் நிர்வாகம் உடனடியாக தொழிற்சாலையை திறக்க வேண்டும், சட்டவிரோதமாக கதவடைப்பு செய்துள்ள தொழிற்சாலை நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படும் தொழிலாளர் நலத்துறையின் ஆய்வாளர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

   புதுச்சேரி காந்திநகர் தொழிலாளர் நலத்துறை அலுவலகம் எதிரில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு யூகால் சங்கத்தின் செயலாளர் அரிபாபு தலைமை தாங்கினார். இதில் சிஐடியு மாநில தலைவர் பிரபுராஜ், செயலாளர் சீனுவாசன், முன்னாள் தலைவர் முருகன், முன்னாள் செயலாளர் பெருமாள், நிர்வாகிகள் கொளஞ்சியப்பன், ராஜ்குமார், பச்சமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.