சென்னை, ஜூலை 17- அம்பத்தூர் கொரட்டூர், மாதவரம், சோழிங்க நல்லூர் ஆகிய பகுதிகளில் ஆவின் பால் பண்ணை உள்ளது. இங்கு போக்கு வரத்து பிரிவில் 170 பேர் ஓட்டுநர்களாக வேலை செய்கின்றனர். இந்நிலை யில் அவர்கள் தங்களை சிஐடியு தொழிற்சங்கத்தில் இணைத்துக் கொண்டனர்.
இதையடுத்து அம்பத் தூர் பால் பண்ணையில் திங்களன்று (ஜூலை 15) பேரவைக் கூட்டம் நடை பெற்றது. சிஐடியு மாநில துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, அம்பத்தூர் பகுதி தலைவர் பாலுசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
தீர்மானங்கள்
தமிழ்நாடு முதலமைச்சர் அரசு ஊழியர்களுக்கு 25.10.2023 மற்றும் 12.03.2024 தேதிகளில் அறிவித்த 8 விழுக்காடு அகவிலைப்படி மற்றும் 1.04.2023இல் அறிவித்த 4 விழுக்காடு அகவிலைப்படியை நிலுவைத் தொகையுடன் உடனே வழங்க வேண்டும், வாகனங்கள் விபத்தில் பழுதடையும் போது அதற்கான செலவீனங் களை காப்பீடு நிறுவனத் திடமிருந்து மட்டுமே பெற வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
புதிய நிர்வாகிகள்
தலைவராக ஆனந்த பாபு, செயலாளராக கோகுல கண்ணன், பொருளா ளராக எஸ்.கண்ணன் உள்ளிட்ட 11 பேர் நிர்வாகி களாக தேர்வு செய்யப்பட்ட னர்.