districts

img

உழவர்கரை விற்பனைக்குழு தேர்தலில் சிஐடியு சாதனை வெற்றி!

புதுச்சேரி,பிப்.23- உழவர்கரை நகராட்சி யில் நடந்த சாலையோர வியாபாரிகள் குழு  பிரதிநிதி கள் தேர்தலில் சிஐ டியு அபார வெற்றி பெற்றுள்ளது. புதுச்சேரி உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட நகர சாலையோர வியா பாரக்குழுவுக்கு ஆண்கள் 6 பேரும்,பெண்கள் 6 பேர் என மொத்தம் 12 உறுப்பி னர்களை தேர்வு செய்ய தேர்தல் புதனன்று (பிப். 22) நடைபெற்றது. இதில் சிஐ டியு சார்பில் 4 பெண் போட்டியின்றி தேர்வான நிலையில், 8 பேரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்றது. புதுச்சேரி பிரதேச சாலை யோர சிஐடியு வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 8 பேரும், ஏஐடியுசி, பிஎம்எஸ் ஆகிய தொழிற்சங்களை சேர்ந்தவர்கள் என மொத்தம் 23 பேர் போட்டி யிட்டனர். உழவர்கரை, தட்டாஞ் சாவடி,கதிர்காமம் என 7 சட்டமன்ற தொகுதிகளி லுள்ள  920 சாலையோர வியாபாரிகளில்  746 பேர்  வாக்களித்தனர். பின்னர் நடந்த எண்ணிக்கையில் தொடக்கம் முதல் சிஐடியு சார்பில் போட்டியிட்ட 6 பேரும் முன்னிலை வகித்த னர். இறுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றனர். இதனையடுத்து, சிஐ டியு சார்பில் வெற்றி பெற்ற வர்களின் எண்ணிக்கை 10 உயர்ந்தது. ஏஐடியூசி, பிஎம்எஸ் சங்கத்தில் தலா ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றனர். வாழ்த்து இத்தேர்தலில் வெற்றி பெற்ற சிஐடியு பிரநிதிகள் 10 பேரும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், சிஐடியு புதுச்சேரி மாநில தலை வர்கள் முருகன், கொளஞ்சி யப்பன், பிரபுராஜ், சீனு வாசன்,மதிவாணன், வடிவேல்,அழகர்ராஜ் உள்ளிட்டவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.