districts

img

கிறிஸ்துமஸ் சேர்ந்திசை நிகழ்ச்சி

சென்னை, டிச.29  கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சர்வதேச கலாச்சாரம் மற்றும் நல்லிணக்கத்தை போற்றும் வகையில் பியூபிள் இன்டர்நேஷ்னல் பள்ளியில் சேர்ந்திசை நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னையில் உள்ள தாய்லாந்து தூதரக தூதர் நித்திரூஜ் போன்பிரசேர்ட் தலைமை தாங்கினார். இந்த இசை நிகழ்ச்சி மாணவர்களின் அற்புதமான கலைத்திறனை வெளிப்படுத்தியது. இதில் 52 கலைஞர்கள், பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.  இந்தநிகழ்சியில் பேசிய தாய்லாந்து தூதர், தாய்லாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையே மாணவர் பரிமாற்ற நிகழ்ச்சியின் அவசியத்தை வலியுறுத்தினார்.