districts

குறவன் இன பெண்களிடம் காவலர்கள் பாலியல் அத்துமீறல் சித்தூர் கூடுதல் எஸ்.பி. விசாரணை

கிருஷ்ணகிரி, ஜூன் 25-

     விசாரணைக்காக அழைத்து சென்ற குறவன் இன பெண்களுக்கு ஆந்திர காவல்துறையினர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்க ளிடம் சித்தூர் கூடுதல் எஸ்.பி. நேரில் விசாரணை நடத்தினார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகே உள்ள புளியாண்டபட்டி கிராமத்தில் குறவன் இனத்தைச் சார்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இதில் அய்யப்பன் என்பவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்திலுள்ள  ஒரு நகைக்கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் இது குறித்து ஆந்திர மாநில காவல்துறை யினர் அய்யப்பன், அவரது தாயார் உட்பட 4 பேரை கடந்த 11 ஆம் தேதி சித்தூர் காவல்துறையினர் விசார ணைக்காக அழைத்துச் சென்றனர்.

   இதுகுறித்து அய்யப்பனின் சகோதரி ஆன்லைனில் புகார் மனு அளித்துள்ளார். இதனால் ஆந்திர மாநில காவல்துறையினர் கடந்த 12 ஆம் தேதி இரவு 15-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் புளியாண்டபட்டி வீட்டிற்குள் புகுந்து ரமேஷ் மற்றும் 3 பெண்கள் உட்பட 6 பேரை அடித்து துன்புறுத்தி அழைத்துச் சென்றனர்.

    ஆந்திர மாநில காட்டுப் பகுதிக்குள் கடத்தி சென்று குறவன் இன பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல், வன்புணர்ச்சி உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கி யுள்ளனர்.  இந்த தகவலை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பெரும் முயற்சியால் 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

   மேலும் இரண்டு பேரின் நிலைமை என்னவென்றே தெரியவில்லை. இதனையடுத்து, இந்த விவா கரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் தலை யிட்டு பாதிக்கப்பட்ட குறவன் இன மக்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கடிதம் எழுதினார்.  இந்நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் எல்.சுதாகர் லூசூரி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட தனிப்படை காவ லர்கள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது.  

     இந்த நிலையில், இந்த விசா ரணை குழுவினர்  போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் சாதி சான்றிதழ் ஆய்வுகள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டு, பின்னர் புளியாண்டப்பட்டி கிராமத்தில் அய்யப்பன் மற்றும் அவ ரது உறவினர்கள் வீடுகளில் உள்ள 8 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதில் விசாரணை செய்யப்பட்டவைகள் வீடியோ பதிவு செய்து கொண்டனர்.