கள்ளக்குறிச்சி, ஏப்.12 - பொய்யர்களின் கூட்டத் தலைவன் நரேந்திர மோடி, அதிமுகவின் பாதம் தாங்கி பழனிச்சாமி பாஜக வோடு கள்ளக் கூட்டணி இப்பொழுது அம்பலமாகி வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை கூறினார். கள்ளக்குறிச்சி மக்க ளவைத் தொகுதி திமுக வேட்பாளர் மலை யரசனுக்கு வாக்குகள் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் சங்கராபுரம் பேருந்து நிலையம் அருகில் மாவட்ட குழு உறுப்பினர் சசிகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் சின்ன துரை எம்எல்ஏ பேசிய தாவது : பொய்யர்களின் கூட்டு தலைவன் நரேந்திர மோடி, அதிமுகவின் பாதம் தாங்கி பழனிச்சாமி பாஜக வோடு கள்ளக் கூட்டணி இப்பொழுது அம்பலமாகி வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறார் நான் கை காட்டும் தலைவர் தான் அடுத்த பிரதமர் என்று, நாம் தமிழர் கட்சி சீமான் சொல்கிறார் நான் யாரை கை காட்டுகிறேனோ அவர் தான் அடுத்த பிரதமர் என்று, ஆனால் பிரதமர் மோடி சொல்கிறார் நாங்கள் 400 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று. ஆனால் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெற முடியாது. மதத்தின் பெயரால் கலவரம் ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமிய சகோதரர்கள் அமைதியான வழியில் கல வரங்கள் எதுவும் இன்றி தமிழ்நாட்டிலே கொண்டாடி வருகின்றனர் ஆனால் வட மாநிலங்களில் கொண்டாட முடியுமா. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகத்தில் பாஜகவை துரத்தி அடித்ததன் காரணத்தால் தான் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அமைதி யாக இந்த மாநிலங்களில் வாழ முடிகிறது. ஆனால் மீண்டும் கொல்லைப்புறம் வழியாக மோடியை கொண்டு வருவதற்கு எடப்பாடியும் சீமானும், ராமதாசும் முயற்சித்து வரு கின்றனர் தமிழ் குடிதாங்கி ராமதாஸ் பாமக நிறுவனத்தலை வர் ராமதாசு தன்னை தமிழர்கள் குடிதாங்கி என்று பெருமையோடு சொல்லிக் கொள்வார். அவர் ஒவ்வொரு முறையும் தமிழகத்திற்கு என்று நல்ல ஒரு பட்ஜெட்டை தாக்கல் செய்வார். அந்த ராமதாசை பார்த்து கேட்கின்றேன் விவ சாயிகளுக்கு எதிராக சட்டம் கொண்டு வந்து தில்லியில் விவசாயிகள் சாகடிக்கப்பட்டதையும், சட்டபூர்வமாக ஊழலை உரு வாக்கிரூ. 8000 கோடி ஊழல் பணத்தை கொள்ளை யடித்தும், இட ஒதுக்கீட்டிற்கு எதிராக செயல்படும் பாஜகவோடு கூட்டணி வைத்திருக்குறீர்களே இது நாட்டிற்காகவா அல்லது சீட்டுக்காகவா என சின்னதுரை கடுமையாக சாடினார். முன்னதாக சிபிஎம் ஒன்றிய செயலாளர் எஸ்.சிவாஜி வரவேற்றார். திமுக மாவட்ட செயலாளர் தா.உதயசூரியன்,சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், காங்கிரஸ் மாவட்ட தலைவர் பி.எஸ்.ஜெய் கணேஷ், விசிக வடக்கு மாவட்ட செயலாளர் வேல்.பழனியம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சின்னசேலம் ஒன்றிய செயலாளர் டி.மாரிமுத்து, கல்வராயன் மலை ஒன்றிய செயலாளர் பி.அண்ணாமலை, மாவட்ட செயற்குழு வே.ஏழுமலை திமுக ஒன்றிய செயலாளர் என். ஆறுமுகம்,காங்கிரஸ் நகரத் தலைவர் எம்.முஹம்மது பாஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.