districts

திண்டிவனத்தில் குழந்தைகள் பூங்கா

விழுப்புரம், ஜூன் 7-

     விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி கலைஞர் நகர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.43 லட்சத்தில் வகாப் நகரில் சிறுவர் பூங்கா திறப்பு விழா நடை பெற்றது. இந்த பூங்காவை சிறுபான்மை துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்து குழந்தைகள் விளையாடும் பூங்காவிலுள்ள ஊஞ்சலில் விளையாடினார்.