பெரம்பூர் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காண்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்னக ரயில்வே, காவல் துறை, மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.