சென்னை, அக். 14- சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்திய பிரியா, ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளியை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப் படை காவல்துறையினர் வியாழக்கிழமை நள்ளிரவு துரைப்பாக்கம் கிழக்கு கடற்கரை பகுதி யில் மறைந்திருந்த கொலை யாளி சதீஷை கைது செய்தனர். அவரிடம் காவல்துறை யினர் விடிய விடிய விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்றனர். விசா ரணைக்குப் பிறகு வெள்ளிக்கிழமை அவரை பலத்த பாதுகாப்புடன் சைதாப்பேட்டை குற்றவி யல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவரை வரும் 28ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் இருந்து வெளியே அழைத்து வரும்போது வழக்கறிஞர்கள் சிலர் தாக்க முயன்றதால் பர பரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மகள் கொல்லப்பட்டதையடுத்து மனமுடைந்து காணப் பட்ட அவரது தந்தை வெள்ளிக்கிழமை உயிரி ழந்தார்.