குறைகளை தெரிவிக்க ‘வாட்ஸ் அப்’ எண் அறிமுகம்
வாணியம்பாடி, ஆக. 31- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. நகராட்சி பொது சுகாதாரம், குடிநீர் வினியோகம், மழை நீர் தேங்கியுள்ள இடங்கள், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளில் குறைபாடுகள் ஏற்பட்டால், மக்கள் வாட்ஸ் அப்பில் புகார் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து 73973 92679 எண்ணில் ஆணை யாளருக்கும், 7397392680 எண்ணில் பொறியாள ருக்கும், 95005 37160 எண்ணில் சுகாதார அலுவ லருக்கும் புகார்களை அனுப் பலாம் என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாலிபரின் வங்கி கணக்கிலிருந்து ரூ.5.11 லட்சம் அபேஸ்
கிருஷ்ணகிரி, ஆக. 31- கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள பீர்தே பள்ளி பகுதியை சேர்ந்தவர் விமல்கார்த்திக் (23). இவர் தனியார் நிறுவ னம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது செல்போனுக்கு அழைப்பு விடுத்த மர்ம நபர் வங்கியில் இருந்து பேசு வதாகக் கூறி விமல்கார்த் திக்கின் வங்கி கணக்கு விவரங்களை கேட்டுள் ளார். வங்கி அதிகாரிதான் பேசுகிறார் என்று நம்பி விமல் கார்த்திக் தனது கணக்கு தொடர்பான விபரங்களை தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.5 லட்சத்து 11 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுந் தகவல் வந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த விமல்கார்த்திக் இதுகுறித்து மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையில் புகார் அளித் தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆரோக்கிய உணவு வகைகள் சென்னையில் அறிமுகம்
சென்னை, ஆக.31- ஆரோக்கிய உணவு வகை தயாரிப்பில் முன்னணியில் உள்ள சுப்ரீம் பார்மசூடிகல்ஸ் நிறுவனம் ‘சுப்ரீம் சூப்பர் புட்ஸ்’ என்ற பெயரில் புதிய உணவு வகைகளை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது. இதை இந்நிறுவனத்தின் வணிக ஆலோசகர் ஸ்ரீவத்சன் ஆத்தூர் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உணவு உட்கொள்வதில் உள்ள இடைவெளியை பூர்த்தி செய்யவும் ஆரோக்கியமான வாழ்க்கையை மேம்படுத்தும் குறிக்கோளுடனும் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளோம் என்றார். எங்கள் நிறுவனம் உணவு அறிவியலில் விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது என்றும் அவர் கூறினார். இந்த நிதி ஆண்டின் இறு திக்குள் சென்னை மண்டலத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்டோர்களில் எங்கள் தயாரிப்பு களை விற்பனை செய்ய திட்ட மிட்டுள்ளோம் பிற முக்கிய நகரங்களான கோவை, திருச்சி, மதுரை, சேலம், வேலூர் மற்றும் பாண்டிச்சேரியிலும் 2 ஆயிரத் திற்கும் மேற்பட்ட ஸ்டோர்களை திறக்க திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.