. மாமல்லபுரம், டிச.24- புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், இந்திய பாரம்பரிய கலாச்சாரத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் துவங்கி ஜனவரி மாதம் வரை நாட்டிய விழா நடத்தப்படுகிறது. ஒன்றியஅரசு மற்றும் மாநில அரசு சுற்றுலா துறை கள் இணைந்து நடத்தும் இந்த விழாவில், பரதம், கரகம், காவடி, ஒயிலாட்டம் மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, குச்சிப்புடி, கதகளி, பறை இசை, ராஜஸ்தானி, ஒடிசி உள்ளிட்ட 60 வகை யான கலைகள் அரங் கேற்றப்படும். இந்த ஆண்டு விழா வெள்ளியன்று ( டிச 23) மாலை துவங்கியது. இவ்விழா தொடர்ந்து ஜன வரி 12 ஆம் தேதி வரை நடைபெறும்
துவக்க விழா
வெள்ளியன்று நடை பெற்ற இவ்விழாவினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் சிறு குறு நடுத்தர தொழில் நிறு வனங்கள் அமைச்சர் அன்பரசன், ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தனர், பின்னர் பேசிய அமைச்சர் ராமச்சந்திரன், கோவளம் கடற்கரைக்கு நீலக்கொடி அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. செங்கல் பட்டு மாவட்டம் கொளவாய் ஏரியில் படகு சவாரி, நீர்விளையாட்டுகள், பறவைகளைக் காண பார்வையாளர் மாடம் மற்றும் இதர வசதிகள் கொண்ட சுற்றுலாத் தல மாக மாற்ற ரூ. 1.44 கோடி கருத்துரு மற்றும் திட்டமதிப்பீடு தயாரிக்கப் ப ட்டு வருகிறது.
ஒளிரும் பூங்கா
மாமல்லபுரத்தில் உள்ள மரகதப் பூங்காவில் ஒளி ரும் பூங்கா மற்றும் பிற பொழுதுபோக்கு அம்சங்கள் பொது – தனியார் பங்களிப்புடன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அர்ஜூனா தபசில் ஒளி-ஒலி காட்சி
மாமல்லபுரத்தில் உள்ள அர்ஜூனா தபசில் முப்பரி மாண தொழில்நுட்ப உதவி யுடன் ரூ. 5 கோடியில் ஒளி- ஒலி காட்சி அமைக்க நட வடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தங்கும் விடுதி களை இணையதள பயண நிறுவனங்களில் இணையதளத்தில் இடம்பெற செய்து பிரபலப் படுத்தி, வருவாயை அதி கரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ரூ. 1.50 கோடி அதிக வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்றார். முதல் நாள் நிகழ்ச்சி யாக சென்னை அரசு இசைக்கல்லூரி மாண வர்களின் நாதஸ்வரக் கச்சேரியும், இரண்டாம் நிகழ்ச்சிகள் மதுரை கோவிந்தராஜ் குழுவி னரின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சியும் அதை தொடர்ந்து பிரியதர்ஷினி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது . அமைச்சர் தா.மோ.அன்பரசன் , தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழ கத்தின் இயக்குநர் சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், சுற்றுலா துறை அரசு முதன்மை செயலாளர் சந்திரமோகன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, வரலட்சுமி மதுசூதனன், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளூர் பொதுமக்கள் வெளியூர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.