தாம்பரம்,டிச.6- சென்னையை அடுத்த தாம்பரம் காவல் நிலையத் தில் குற்றப்பிரிவு காவல ராக பணியாற்றி வருபவர் காளீஸ்வரி. இவர், தாம்பரம் பேருந்து நிலைய பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கூடுவாஞ் சேரி செல்லும் அரசு பேருந்தில் ஏறிய வடமாநில வாலிபர், சிறிது நேரத்தில் கீழே இறங்கினார். இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த காளீஸ்வரி, அந்த வாலிபரிடம் விசாரிக்க முயன்றார். ஆனால் அந்த வாலிபர், தப்பி ஓடினார். உடனே விரட்டிச்சென்று அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து சோதனை செய் தார். அதில் அந்த வாலிபரின் சட்டை பையில் விலை உயர்ந்த செல்போன் இருந்தது. அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில் அவர், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சோட்டோ (வயது 19) என்பதும், கூடுவாஞ்சேரி பேருந்தில் இருந்த பயணி ஒருவரின் விலை உயர்ந்த செல்போனை திருடியதும் தெரிந்தது. இதற்கிடையில் செல் போனை பறிகொடுத்தவர் அதே எண்ணில் தொடர்பு கொண்டபோது, அவரிடம் போலீசார் விவரங்களை தெரிவித்து காவல்நிலையம் வரவழைத்தனர். விசா ரணையில் அவர் ஆண்டி மடத்தை சேர்ந்த மாயவேல் (30) என தெரியவந்தது. அவர் அளித்த புகாரின் பேரில் தாம்பரம் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து, செல்போனை திருடிய சோட்டோவை கைது செய்து சிறையில் அடைத்தனர். துரிதமாக செயல்பட்டு செல்போன் திருடனை விரட்டிப்பிடித்த பெண் போலீஸ் காளீஸ்வ ரிக்கு பொதுமக்கள் பலரிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. தாம்ப ரம் ஆய்வாளர் சார்லஸ் தலைமையில் காளீஸ்வ ரியை சால்வை அணிவித்து பாராட்டினார்.