ராணிப்பேட்டை, நவ. 11 - ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலவை அரசினர் மகளிர் மேல் நிலைப்பள்ளியில் சங்கமம் 2023 விழா சனிக்கிழமை யன்று (நவ. 11) நடை பெற்றது. இதில் சந்திரயான் - 3 திட்ட இயக்குநர் ப. வீரமுத்துவேல், விஐடி பல்கலைக்கழக துணை வேந்தர் வி. சங்கர் விஸ்வ நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, ஸ்ரீ சாய் ஹெர்பாலயா மற்றும் கலவை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவர் களின் அறிவியல் கண்காட்சி மற்றும் செயல்முறைகளை கண்டுகளித்தனர்.