districts

img

வேலூர் அருகே பள்ளி வகுப்பறையில் உடைந்து தொங்கிய நாற்காலிகள் சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு கண்டிப்பு

வேலூர், ஜன. 29- சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் தலைமையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் வேலூர் மாவட்டத்திற்கு வருகை தந்தனர். அப்போது, மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டர். அப்போது, தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி, பொய்கை ஆரம்ப சுகாதார நிலையம், அரசு சுற்றுலா மாளிகை, மாணவியர் விடுதி, காட்பாடி தாலுகா மருத்துவமனை ஆகியவற்றை பார்வையிட்டனர். வருகை பதிவேட்டில் சாதி பெயர் தொரப்பாடி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று போது மாண வர்களின் வருகை பதிவேடு புத்த கத்தை ஆய்வு செய்தனர். அப்போது, மாணவர்களின் சாதி குறிப்பிடப் பட்டிருந்தது. இதை பார்த்ததும் அதிர்ச்சிய டைந்தனர். மாணவர்களின் வருகை பதி வேட்டில் சாதி பெயரை குறிப்பிடக் கூடாது என்று அரசாணை இருப்பதை சுட்டிக்காட்டி இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்கக்கூடாது என்று தலைமை ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களையும் எச்சரித்தனர். மேலும், பள்ளி வளாகத்திற்குள் மாண வர்கள் பயன்பாட்டிற்கு அமைக்கப்பட்டி ருந்த குடிநீர் குழாய்கள் உடைந்து சேதமடைந்த இருப்பதையும் ஆய்வில் கண்டுபிடித்தனர். மேலும், வகுப்பறைகளில் ஜன்னல்-கதவு, நாற்காலிகள் உடைந்து தொங்கிக் கொண்டிருந்தது. இவை அனைத்தையும் பழுது நீக்கம் செய்ய அறி வுறுத்தினர். பள்ளி நிர்வாகம் உடனடியாக சரி செய்து கொடுத்தது. மேலும், பள்ளி ஆசிரியர்களை போன்று மாணவர்களும் வகுப்பறைக்குள் காலணி அணிந்து செல்லலாம் என்றும் மாணவர்களிடம்  தெரிவித்தனர். ஆய்வு பணிகள் முடிந்ததும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடத்தி னர். இதில் குழுத் தலைவர் உறுப்பினர்கள் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், இ.பரந்தாமன், எம்.எச்.ஜவாஹிருல்லா, சிவக்குமார், சட்டப்பேரவை முதன்மை செயலாளர் கி.சீனிவாசன், மாவட்ட ஆட்சியர் வே.ரா.சுப்புலட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார், ஜெ.எல்.ஈஸ்வரப்பன், அமலா விஜயன் மற்றும் பல துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.