மகாகவி குமாரன் ஆசான் எழுதிய ‘சண்டால பிட்சுகி’ மலையாள கவிதையின் நூற்றாண்டு விழா ஞாயிறன்று (பிப்.19) கேரள சமாஜத்தில் தொடங்கியது. கேரள சாகித்ய அகாதெமி, மதராஸ் கேரளா சமாஜம் மற்றும் மலையாளி சங்கங்கள் இணைந்து நடத்தும் இந்நிகழ்வை, கேரள சாகித்ய அகாதெமி தலைவர் கவிஞர் பேரா.கே.சச்சிதானந்தம் தொடங்கி வைத்தார். அதன் செயலாளர் பேரா.சி.பி.அபுபக்கர், கேரள சமாஜம் தலைவர் சிவதாசன் பிள்ளை, பொதுச்செயலார் டி.அனந்தன், கும்பளங்காடு உண்ணி கிருஷ்ணன், விழாக்குழு தலைவர் ஏ.வி.அனூப், ஒருங்கிணைப்பாளர் எம்.பி.தாமோதரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.