districts

img

பணமில்லா மருத்துவ காப்பீடு: மின்வாரிய ஓய்வுபெற்றோர் கோரிக்கை

விழுப்புரம், மார்ச் 14- தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் விழுப்புரம் மண்டலக்குழு கூட்டத்தில் மின்வாரி யத்தில் ஓய்வு பெற்றோருக்கு பணமில்லா மருத்துவ காப்பீடு வழங்குக வேண்டும் என வலியுறுத்தினர். இந்தக் கூட்டத்திற்கு விழுப்புரம் கிளைத் தலைவர் ஜி.ஜெயராமன் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர்கள் டி.வெங்கடாசலம் (கடலூர்), ஆர்.ராஜாமணி (கள்ளக்குறிச்சி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செய லாளர்கள் டி.திருத்துவராஜ், கே.நட ராஜன், மண்டலச் செயலாளர் தங்க. அன்பழகன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், மின் வாரியத்தில் ஓய்வுபெற்றோருக்கு பணமில்லா மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும், மின்துறை பொதுத் துறையாகவே நீடிக்க வேண்டும், தனியார் மயத்தை கைவிட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மின்வாரியத்திலுள்ள காலிப்பணியிடங்களை நியாயமான முறையில் நிரப்ப வேண்டும். மின் ஊழியர்களுக்கு 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை வழங்க வேண்டும், மின்வாரியத்தில் காலிப்பணியிடங் களை நிரப்பும் போது ஒப்பந்த பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.