districts

img

வழக்குகளை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வழக்கறிஞர்கள் எதிர்ப்பு வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்

திருவள்ளூர், ஜூன் 27-

      பொன்னேரி நீதிமன்ற எல்லையில் இருந்த 13 கிராம வழக்குகளை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணி கட்டிஉண்ணாநிலைப் போராட்டத்தில்  ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.  

    திருவள்ளூர் மாவட்டம்,   பொன்னேரி யில்   கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம்,  சார்பு நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றங்கள், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் என 6 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இந்த நீதிமன்றங்களில் இருந்து 13 கிராம எல்லைக்குட்பட்ட வழக்கு களை மாதவரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்படு வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொன்னேரியில் உள்ள 6 நீதிமன்றங்களை சேர்ந்த வழக்கறி ஞர்கள் வாயில் கருப்பு துணி கட்டி நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வாயில் கருப்பு துணி அணிந்தபடி நீதி மன்றத்திற்கு சென்று வழக்கு விசாரணை யில் வாதிடாமல் எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர். வழக்கறிஞர்கள் மட்டுமின்றி வழக்காடிகளும் இதன் காரணமாக பாதிப்பிற்கு உள்ளாவார்கள் என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

      ஒரு  தாலுக்காவிற்கு ஒரு நீதிமன்றம் என அரசும்,  நீதித்துறையும் ஏற்கெனவே தெரிவித்திருந்த நிலையில், அரசும், நீதித்துறையுமே தங்களது கொள்கையை மீறி செயல்படு வதாக புகார் தெரிவித்தனர்.ஏற்கெனவே உள்ளது போல பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட 13கிராமங்களை மாதவரம் நீதிமன்றத்தில் இணைக்கும் முடிவை கைவிட்டு பொன்னேரி நீதிமன்றங்களிலே வழக்குகள் நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்த னர். தவறும் பட்சத்தில் அடுத்து உண்ணா நிலை போராட்டம் நடத்தப்படும். என அடுத்தடுத்த போராட்டங்களில் ஈடுபடு வோம் என வழக்கறிஞர்கள் எச்சரித்தனர்.