சென்னை, நவ. 29 - அரசின் தடையை மீறி தனியார் பள்ளியில் ஆர்எஸ்எஸ் தலைமையில் 30 அமைப்புகள் கலந்து கொண்ட கூட்டம் நவ 26-27 தேதிகளில் சென்னை அண்ணாநகர் ஜெயகோபால் கரோடியா விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக்குலேஷன் உயர்நிலைப் பள்ளியில் நடந்துள்ளது. தடையை மீறி கூட்டம் நடத்த அனுமதி அளித்த, பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி திங்களன்று (நவ. 28) பள்ளி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதனையொட்டி அண்ணாநகர் காவல்நிலையத்தில் ஜி.செல்வா மற்றும் 30 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.