சென்னை, டிச.12, - சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள புரோமெட் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட இரதய அறுவை சிகிச்சை ஏபிசிடிஓ சினிமா 2022 இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதளம் நாள்பட்ட இதய அடைப்பு சிகிச்சை முறைக்கான சிறப்பு அமர்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் உலகம் முழுவதும் உள்ள இதயநோய் நிபுணர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு பாதுகாப்புடன் இருதய நுண்துளையீட்டு சிகிச்சையை மேற்கொள்வது குறித்து விளக்கமளிக்க புரோமெட் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் அருண் கல்யாணசுந்தரத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. அருண் கல்யாணசுந்தரம் இந்த சிகிச்சை யில் உலக புகழ்பெற்ற நிபுணர் ஆவார். மேலும் இவர், சிக்கலான இதய நுண்துளை யீட்டு சிகிச்சை மற்றும் நாள்பட்ட இருதய அடைப்பு சிகிச்சை ஆகிய வற்றில் நிபுணத்துவம் பெற்றவர். இவர் சென்னையைச் சேர்ந்த ஒரு நோயாளிக்கு, முற்றிலும் சிக்கலான ஆஞ்சி யோபிளாஸ்டியை சிகிச்சையை செய்தார். ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்ட இந்த நோயாளிக்கு ரத்த நாளம் சம்பந்தமான மிகவும் சிக்க லான நோயும் இருந்தது. இந்த பிரச்சினை யானது இருதயத்திற்கு கீழே மேலிருந்து கீழாக ரத்தத்தை கொண்டும் ரத்த குழாயில் இருந்தது. இதற்கான சிறப்பு மருத்துவநுட்பங்களை பயன்படுத்தி இதை டாக்டர் அருண் சிறப்பாக கையாண்டார். டாக்டர் அருண் மேற்கொண்ட இந்த சிகிச்சையை உலகம் முழுவதும் உள்ள சுமார் 500 இருதயநோய் நிபுணர்கள் நேரடியாக இணையத்தில் பார்த்தனர். இந்த சிகிச்சை முறை குறித்த குறிப்புகள், நுட்பங்கள், பாதுகாப்பு மற்றும் இந்த நடைமுறைகளின் நிலை மற்றும் எதிர்காலத்தில் எதிர்கொள்ள வேண்டிய பரந்த அளவிலான சவால்கள் குறித்தும் டாக்டர் அருண் கல்யாணசுந்தரம் விரிவாக எடுத்துக் கூறினார்.