districts

img

மின்வாரியத்தின் பிபி-2 உத்தரவை ரத்து செய்க ஓய்வூதியர் சங்க பேரவை வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 22 -

     முடிவெடுக்கும் அதிகாரத்தை வாரியத் திடமிருந்து அரசாங்கத்திடம் ஒப்படைக்க வகைசெய்யும் மின்வாரியத்தின் பிபி-2 உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று ஓய்வூதியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர்  நல அமைப்பின் மத்திய சென்னை கிளை யின் 16வது ஆண்டு பேரவை சனிக் கிழமையன்று (ஜூலை 22) சிந்தாதிரிப் பேட்டையில் நடைபெற்றது.

    இந்தப் பேரவையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்,  அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்க ளுக்கு ஓய்வூதியம் தொடர்ந்து வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும், ஓய்வூதி யர்களுக்கும் ரூ3 லட்சம் குடும்ப பாதுகாப்பு நிதி வழங்க வேண்டும்,

     கமுட்டேஷன் பிடித்த காலத்தை 12  ஆண்டுகளாக குறைக்க வேண்டும்,  70 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு  10 விழுக்காடு கூடுதல் ஓய்வூதியம் தர வேண்டும், விதவை, மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகள் பெற்று வந்த குடும்ப ஓய்வூதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பேரவைக்கு கிளையின் தலைவர் இரா.அண்ணாமலை தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் ஏ.பாலசுப்பிரமணியன் சங்க  கொடியை ஏற்றினார். துணைத் தலைவர் எஸ்.உமாபதி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். இணைச் செயலாளர் பி.சின்ன துரை வரவேற்றார். சென்னை வடக்கு மண்டலச் செயலாளர் எஸ்.கணேசன் பேரவையை தொடங்கி வைத்து பேசினார். கிளைச் செயலாளர் எஸ்.சுந்தர்ராஜன் வேலை அறிக்கையும், பொருளாளர் இ.ராஜ சேகரன் வரவு,செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர்.

   அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.ஜெகதீசன், துணைத் தலைவர் என்.தீரமணி,  துணைப் பொதுச் செயலாளர் ஆர்.ராமநா தன், மாநிலச் செயலாளர் கே.நடராஜன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன், உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி, சிஐடியு முன்னாள் மாவட்டச் செயலாளர் எஸ்.அப்பனு ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். மாநில துணைப் பொதுச் செயலாளர் வி.பிச்சைராஜன் நிறைவுரையாற்றினார். செயற்குழு உறுப்பினர் வி.ஹரி நன்றி கூறினார். கிளைத்  தலைவராக  இரா.அண் ணாமலை, செயலாளராக எஸ்.சுந்தர்ராஜன், பொருளாளராக இ.ராஜசேகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.