சென்னை, மே 12- நீலகிரி மாவட்டம், ஊட்டியில் வரும் 13 முதல் 30ஆம் தேதி வரை ஹெலிடூரிசம் என்ற பெயரில், ஹெலிகாப்டர் சாகச சுற்றுலா நடத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முருகவேல் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதை நீதிமன்றம் விசாரித்த நிலையில், ஹெலிகாப்டர் சுற்றுலா நடத்துவது குறித்து எந்த இறுதி முடி வும் எடுக்கவில்லை என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து வரும் 17ஆம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.