districts

img

ஒன்றிய பாஜகவை கண்டித்து பிரச்சாரம்

சமையல் எரிவாயு, அரிசி, எண்ணெய் வித்துக்கள் என மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் மீது விலையை உயர்த்தியுள்ள ஒன்றிய பாஜக மோடி அரசு கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளியன்று    (செப்.1) திருவள்ளூர் பஜாரில் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.  கட்சியின் வட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு தலைமையில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.நம்புராஜன், மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால்,  மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ராஜேந்திரன், மாவட்ட குழு உறுப்பினர்கள் என்.கீதா, இ.எழிலரசன்,  முன்னாள் மாவட்டச் செயலாளர் கே.செல்வராஜ் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.