கிருஷ்ணகிரி,ஏப்.19- தலித் மக்கள் சார்பில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தியதற்காக ஆதிக்க சாதியினரால் கொல்லப்பட்ட சிபிஎம் கிளைச் செயலாளர் தோழர் சுரேஷ் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சிபிஎம் தளி, கெலமங்களம் ஒன்றியக்குழுக்கள் சார்பில் தேன்கனிக்கோட்டை வட்டம், கல்கேரியில் அவரது நினைவிடத்தில் நினைவஞ்சலி கூட்டம் மார்க்சிஸ்ட் கட்சியின் தளி ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சேகர், இருதயராஜ், கெலமங்கலம் ஒன்றிய செயலாளர் ராஜா, மாவட்டக் குழு உறுப்பினர் நாராயணமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சந்திரசேகர், முனிகிருஷ்ணன், பட்டாபி, சீனிவாசன்,முருகேஷ், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் ஆனந்தகுமார், செயலாளர் நாகேஷ்பாபு,எஸ்.ஆர்.ஜெயராமன், நடராஜன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.