சென்னை,ஜூன் 19-
சிறுகடை வியாபாரிகளுக்கு கடிதம் மூலம் தெரிவித்த உத்தரவை மாநகராட்சி அமல்படுத்தவேண்டும் என்று சென்னை நகர சிறுவியாபாரிகள் சங்கம் வலியுறுத்தி யுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செய லாளர் ஆ.அபுதாகீர் மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பிய கடிதம் வருமாறு:
சென்னை என் எஸ் சி போஸ் சாலை (தெற்கு), ரட்டன் பஜார் (ஈவினிங் பஜார்) சாலை அதனை ஓட்டியுள்ள பகுதியில் 794 கடைகளுக்கு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி (எல்எல்பி சிவில் நம்பர் 21194/93) 794 கடை வியாபாரிகளுக்கு சென்னை மாநகராட்சி இட ஒதுக்கீடு செய்து உரிமம் வழங்கியுள்ளது இதன்படி 1995 முதல் வியாபாரிகள் கடை அமைத்து வியாபாரம் செய்து வாடகை செலுத்தி வருகின்றனர். இவர்கள் சென்னை நகர சிறுவியாபாரிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள்.
அனைத்து வியாபாரிக்கும் இந்தாண்டு (2023) தற்போதைய மாதம் வரை வாடகை நிலுவை தொகையினையும் மாநகராட்சி உத்தரவுக்கிணங்க செலுத்திவிட்டனர்.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சி மண்டலம்-5 உதவி வருவாய் அலுவலர் (ம.அ.வ.து.ந.க. எண் ஆர்1/0208/2023) தேதி 31.01.2023 கடிதம் வியாபாரிகளுக்கு கொடுக்கப்பட்டது. அதில் கடை வைத்து வியாபாரம் செய்யும் ஒவ்வொருவருக்கும் மாநகராட்சி விதிகளுக்குட்பட்டு தற்போ துள்ள வாரிசுதாரர்களுக்கு அவர்கள் பெயரில் உரிமம் வழங்கப்படும் ஒருவாரத் திற்குள் தகுந்த ஆதாரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு கட்டணமாக 12 மாத வாடகை ரூ 4500 பெயர் மாற்ற கட்டணம் ரூ 5000 வரவு காசோலை செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதன்படி வியாபாரிகள் 2023 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அனைத்து ஆவணங்களையும் செலுத்தி பலர் காத்திருக்கின்றனர். ஆனால் இதுவரை யாருக்கும் புது உரிமம் வழங்கவில்லை. இது சம்பந்தமாக வருவாய் அலுவலர் (டிஆர்ஓ) மற்றும் வருவாய் துறை துணை ஆணையர் விசூ மகாஜன் ஆகியோருக்கு ஏப்ரல், மே மாதங்களில் இரண்டு கடிதங்கள் கொடுத்துப் பேசியுள்ளோம் ஆனால் பயனில்லை. இதனால் கடன் வாங்கி வங்கியில் ஒவ்வொரு வியாபாரியும் எடுத்த வரவு காசோலை (ரூ.9500) காலாவதி ஆகும் நிலையில் உள்ளது. அரசு கஜான விற்கு போகவேண்டிய லட்சக்கணக்கான பணம் காலாவதி ஆகும் நிலையில் கேட் பாரின்றி கிடக்கின்றது. அதிகாரிகள் மட்டத்தில் விசாரித்ததில் யாரோ ஆளும் கட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் தலை யிட்டு நிறுத்தி வைத்திருப்பதாக கூறப்படு கிறது. இது நியாயமற்ற போக்கு ஆகும்.
ஏழை நடுத்தர வியாபாரிகள் உரிமையில் தலையிடுவதாகும். உடனே சம்பந்தப்பட்ட மாநகராட்சி ஆணையாளர் தலையிட்டு, தாங்கள் போட்ட உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.