districts

img

பாதுகாப்பற்ற தண்ணீரை பருகியதால் இருளர் மக்களுக்கு தொண்டை வீக்கம் நல்ல தண்ணீருக்காக 3கி.மீ நடைபயணம்

திருவள்ளூர், மே 28-

     பாதுகாப்பற்ற தண்ணீரை பருகியதால் பங்களாமேடு  இருளர் மக்களுக்கு  தொண்டை வீக்க நோய் ஏற்பட்டுள்ள தால் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் வலி யுறுத்தியுள்ளது.  

   திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, செருகனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பங்களாமேட்டில்  58  குடும்பங்களில் சுமார் 300 பேர் வசிக்கின்றனர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் தொடர் போராட்டங்களின் விளைவாக 40 குடும்ப த்திற்கு குடிமனை பட்டா, மின் இணைப்பு, குடி நீர், தொகுப்பு வீடுகள் பெற்றுள்ளனர். பட்டா கிடைக்காதவர்கள் குடிசை கள் அமைத்து வாழ்ந்து வரு கின்றனர்.

    செருக்கனூரில் வாழ்ந்து வந்த இருளர் இன மக்கள், இடநெருக்கடி காரணமாக பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, ஆட்கள் நடமாட்டமே இல்லாத காட்டு பகுதியான பங்களாமேட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குடிய மர்த்தப்பட்டனர்.

குடிக்க தண்ணீர் கூட இல்லாத பாலைவனம்

     இவர்களுக்கு அருகில் உள்ள  ராமகிருஷ்ணா புரத்திலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப் பட்டது. அது குடிக்க முடி யாத அளவிற்கு  உப்பு நீராக உள்ளது. பாது காக்கப்பட்ட தண்ணீர் வழங்க வேண்டும் என மலை வாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்திய பிறகு 2013-ம் ஆண்டு ஊராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. சிறிது காலம் குடிநீர் நன்றாக இருந்தது. பிறகு வறட்சி ஏற்பட்டு நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் அதுவும் உப்பு நீராக மாறியது.  

    இந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு பெய்த பலத்த மழையினால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்த போதிலும் தண்ணீர் நிறம்   மாறியதோடு, பருக முடியாத அளவுக்கு கடும் உப்பு நீராக மாறியது.  

தொண்டை வீக்கம்

     வேறு வழியின்றி அம்மக்கள் கடந்த 10 ஆண்டு களாக உப்பு தண்ணீரை சகித்துக் கொண்டு பருகி வருகின்றனர். சமை யலுக்கும் இந்த உப்பு தண்ணீரையே பயன்படுத்துகிறார்கள். இதனால் தொண்டை வீக்கம், காய்ச்சல் போன்ற மர்ம நோய்களுக்கு ஆளா கிறார்கள். இதில் வெங்க டேசன்-அமுலு ஆகி யோரின் 7 வயது மகன் மகேஷ்க்கு தொண்டையில் தேவையற்ற சதை வளர்ந்து வீக்கம் ஏற்பட்டுள்ளது. உப்பு நீரில் சமைப்பதால், இரவில் சமைத்த உணவை காலையில் கஞ்சிக்கு கூட பயன்படுத்த முடிய வில்லை என்று அவர்கள் வேதனையுடன் தெரி வித்தனர்.  நாளெல்லாம் உழைத்து விட்டு, வீட்டிற்கு வந்து மகிழ்ச்சி யாக உணவை சாப்பிட முடியாமல் அவ திப்படுகிறார்கள்.  

நல்ல தண்ணீருக்காக 3கி.மீ பயணம்

     நல்ல தண்ணீரை பருக வேண்டும் என்பதற்காக  3. கி.மீ. தூரத்திற்கு அப்பால் உள்ள இராணிப்பேட்டை மாவட்டம்,  ஜானகாபுரம் கிராமத்திற்கு சென்று அங்கு ஊராட்சி மன்ற தெரு  குழாய்களில் வரும் குடிநீரை சைக்கிள்கள் மூல மும், தலையிலும் சுமந்து வருகின்றனர்.

 மலைவாழ் மக்கள் சங்கம் வேண்டுகோள்

    . பங்களாமேட்டில் வசிக்கும் இருளர் இன மக்களுக்கு திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சுகாதாரத் துறை யினர் அங்கு முகாம் நடத்தி அனைவரையும் பரி சோதனை செய்து அம்மக்க ளின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய  வேண்டும்  என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் திரு வள்ளூர் மாவட்டச் செய லாளர் ஆர்.தமிழ்அரசு வலி யுறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து நாள் தோறும் இரண்டு வேளையும் டேங்கர்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நட வடிக்கை எடுக்கப்படும் என  வட்டார வளர்ச்சி அதி காரி தெரிவித்தார்.  

    ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தமிழ்நாடு அரசு இதில் தலையிட்டு சிறப்பு திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கி இருளர் இன மக்களின் அடிப்படை தேவையான குடிநீர், சுகா தார பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று மலை வாழ் மக்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. பெ.ரூபன்