districts

img

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தண்ணீரில் மிதந்து வந்த பேருந்துகள்

விழுப்புரம், ஆக.11- விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் அதிகளவில் தண்ணீர் தேங்கியதால் பேருந்துகள் மழை நீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டது. ஏரியில் பேருந்து நிலை யம் அமைத்ததால் ஆண்டு தோறும் மழைக்காலங்க ளில் இந்த நிலைமை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து பலமுறை அதி காரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் சரி செய்யப்படவில்லை. இதே நிலை நீடித்தால், பழைய ஏரியை போல மாறி விடும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தெரி வித்தனர். ஆட்சியர் ஆய்வு பேருந்து நிலையத்தில் தேங்கியுள்ள மழை நீரை மாவட்ட ஆட்சியர் சி.பழனி, ஞாயிற்றுக்கிழமை (ஆக.11) நேரில் பார்வையிட்டார். பின்னர் மழை நீரை வெளி யேற்றுவதற்கு நகராட்சி அலுவலர்களுக்கு உத்தர விட்டார். விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.லட்சுமணன், விழுப்புரம் நகராட்சி ஆணையர் (பொ) ஸ்ரீப்ரியா உட்பட பலர் உடனிருந்தனர்.