districts

img

அதிகாரியின் ஊழியர் விரோத போக்கு

சென்னை, ஜன. 24- சென்னை தொலைபேசி மனித வள முதன்மை பொது மேலாளரை கண்டித்து சென்னையில் செவ்வாயன்று (ஜன. 24) ஊழியர்கள் உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சங்கத்தின் மாநிலச் செயலாளர் எம் ஸ்ரீதர் சுப்ரமணியன் கூறுகையில், சென்னை தொலைபேசியில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் முதன்மை சங்கமாக செயல்படுகிறது. அங்கு மனித வள முதன்மை பொது மேலாளர் இளந்திரை மாற்றல் உத்தரவுகள் போடும்போது பாரபட்சம் காட்டுகிறார். அவர் நிர்வாகத்தின் தவறு களை எதிர்த்து போராடாத இரண்டாம் சங்கத்தின் கைக்கூலியாக செயல்படுகிறார். இதைக் கண்டித்து கடந்த ஆகஸ்ட் மாதம் ஆர்ப்பாட்டம் நடத்தி னோம். மேலும் தலைமை பொது மேலாளரிடம் புகார் தெரிவித்தோம். இதன் பின்னரும் அவரது  ஊழியர் விரோத போக்கு தொடர்கிறது. அவர் தன் போக்கை மாற்றிக் கொள்ள வலி யுறுத்தி உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடு பட்டுள்ளோம். அவர் தனது நடவடிக்கையை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடு வோம் என்றார். சென்னை தொலைபேசி தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் மாநிலத் தலைவர் எஸ்.பாஷா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை அகில இந்திய உதவிப் பொதுச் செயலாளர் எஸ்.செல்லப்பா துவக்கி வைத்தார். மாநிலச் செயலாளர் எம்.ஸ்ரீதர் சுப்ர மணியன், மாநிலப் பொரு ளாளர் எஸ்.ரவி ஆகி யோர் போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி பேசி னர். பொதுச்செயலாளர் பி.அபிமன்யு போராட் டத்தை நிறைவு செய்து பேசினார்.