districts

img

பள்ளி மாணவர்களிடையே மோதல்: தலித் மாணவர் மீது கொடூர தாக்குதல்

கடலூர்,ஜன.20- கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள டி. ராசாபாளையம் மற்றும் நரிமேடு கிராமத்தில் இரு சமூகத்தைச் சேர்ந்த 17 வயது மாணவர்கள் பண்ருட்டி  அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்கள். இதில் தலித் மாணவர் ஒருவர் நரிமேடு கிராமத்தை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவியிடம் நட்பாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. அதே மாண வியை மாற்று சமூகத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் காதலித்து வந்ததாக கூறப் படுகிறது. இதனால்  இரு வருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.  இந்த நிலையில், பள்ளி முடிந்து வெள்ளிக்கிழமை (ஜன.19) தனியார் பேருந்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த தலித்  மாணவனை திருவதிகை அணைக்கட்டு பகுதியில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த  7 மாணவர்கள்  கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த மாணவர் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட மாணவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தாக்குதல் நடத்தியவர்களை கைது  செய்யக் கோரி சனிக்கிழமை  (ஜன.20) பண்ருட்டி காவல் நிலையத்தை முற்று கையிட்டனர். பிறகு, பேருந்து நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு டிஎஸ்பி வந்து  பேச்சுவார்த்தையில் ஈடுப ட்டார். அப்போது, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதைய டுத்து, போராட்ட த்தை கைவிட்டு கலைந்து சென்ற னர்.