சென்னை, மார்ச் 19 - லஞ்சம் பெற்ற வழக்கில் மயிலாப்பூர் சிறப்பு உதவி ஆய் வாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தர விட்டது. 2012ஆம் ஆண்டு 48 லட்ச ரூபாய் பெற்று மோசடி செய்த ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்க கோரி சுந்தரமூர்த்தி என்பவர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வில்லை. சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவை அடுத்து காவல்துறையினர் ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கொடுத்த அசல் ஆவணங்களை திருப்பி கேட்ட சுந்தர மூர்த்தியிடம், சிறப்பு உதவி ஆய்வாளர் செல்லத்துரை 4ஆயிரம் லஞ்சம் பெற்றார். அவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஓம்பிரகாஷ், லஞ்சம் பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் செல்லத்துரைக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.