districts

img

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடைபயணம்

சென்னை, அக்.30  மார்பக புற்றுநோய் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த  வாக்கத்தான் நிகழ்வை ஞாயிற்றுக்கிழமை (அக். 30) எம்.ஜி.எம். புற்றுநோய் மையம் நடத்தியது.   இதனை காவல்துறை துணை ஆணையர் சி.விஜயகுமார்  தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன்,  திண்ணை கலைஞர் வதி ஆகியோர் வாக்கத்தான் நிகழ்ச்சியில் வரவேற்று, மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம். புற்றுநோய் மையத்தில் இருந்து அண்ணா நகர் டவர் பூங்கா வரை நடைபெற்ற  வாக்கத்தான் நிகழ்ச்சியில் பொதுமக்கள், மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்கள், டி.ஜி.வைஷ்ணவ கல்லூரி மற்றும் கிருஷ்ணசாமி கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர்  ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.