districts

வீட்டின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை

கண்டமங்கலம், அக். 7- விழுப்புரம் அருகே சித்தலம்பட்டு கிருஷ்ணா நகரில் வசிப்பவர் சின்ன சாமி. இவர் வத்தல், வடகம் செய்து ஊர் ஊராக சென்று விற்பனை செய்து வருகிறார். இவர் கடந்த 2ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் மதுரை சென்றார். பின்னர் வெள்ளிக் கிழமை காலை வீட்டிற்கு திரும்பிய சின்னச்சாமி வீட்டின் பூட்டு உடைக்கப் பட்டிருப்பதைக் கண்டு  அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த நகை, 1 லட்ச ரூபாய், வீட்டில் இருந்த டிவி உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை அடிக்கப் பட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து சின்னசாமி கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.