districts

img

தடைகளை தகர்த்து சோக்காடியில் உயர்ந்த செங்கொடி!

கிருஷ்ணகிரி,செப்.24- கிருஷ்ணகிரி வட்டத்திற்குட்பட்ட கே.ஆர்.பி.அணையின் பின்புறம் மலைகளை ஒட்டியுள்ளது சோக்காடி கிராமம். இங்கு சுமார்  250 பட்டியலின குடும்பங்கள் உட்பட 800 குடும்பங்களில் 3,500 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.  ஓராண்டுக்கு முன்பு, பெண்கள் உட்பட பட்டியலின மக்கள் தொடர் தாக்குதலுக்கு உள்ளானார்கள். இந்த தகவலை அறிந்த மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அதன்பிறகு, பாதிக்கப்பட்ட மக்களுக்காக தொடர் போராட்டங்கள் நடத்தினர். அதைத் தொடர்ந்து, பட்டியலின மக்கள் பலருக்கும் வீட்டுமனை பட்டாக்கள் கிடைத்தது.தாக்குதல் நிறுத்தப்பட்டது, சாதிய ஒடுக்கு முறைக்குள்ளான மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்நிலையில், 800க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள்  ஒட்டுமொத்தமாக மார்க்சிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர். தற்போது, சோக்காடி கிராமத்தில் கட்சியின் செங்கொடி ஏற்றும் விழாவுக்கு ஏற்பாடு செய்தனர். கொடியேற்றம் மற்றும் கட்சி மாநாடு நடத்த காவல்துறையிடம் அனுமதி கேட்டு மனு கொடுத்தனர். ஆனால், கிருஷ்ணகிரி வட்ட காவல் துறை, வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் மாநாடு மற்றும் கொடி யேற்றும் விழா நடத்த அனுமதி மறுத்தனர். மேலும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் காவல்துறையினரும் குவிக்கப்பட்டனர். பிறகு, சம்பவ இடத்திற்கு வந்த கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் பி.டில்லிபாபு, மாவட்ட காவல் கண்காணிப்பாளரை தொலை பேசியில் தொடர்பு கொண்டார். அதன்பிறகு, அனுமதி கிடைத்தது. இதைத் தொடர்ந்து, மாலை 7 மணிக்கு கொடி கம்பம் நடுவதற்கு காவல்துறையினர் அனுமதி அளித்த னர். பிறகு, பட்டியலின மக்கள் ஒன்று திரண்டனர். செங்கொடியை பி.டில்லி பாபு ஏற்றி வைத்தார்.  அதைத் தொடர்ந்து நடந்த மாநாட்டிற்கு சோக்காடி கிளை செய லாளர் ஆ.அன்பரசன் தலைமை தாங்கி னார். கோவிந்தராஜன் முன்னிலையில் மாநில குழு உறுப்பினர் பி. டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன்,வட்டச் செயலாளர் பெரிய சாமி,மாவட்ட செயற்குழு உறுப்பினர்  ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி,மாவட்டக் குழு உறுப்பினர்கள் ராஜா,லெனின் முருகன்,சக்தி,மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ராதா  ஆகியோர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினர்.