districts

img

வீட்டுமனைப் பட்டா கேட்டு பூம் பூம் மாட்டுக்காரர்கள் மனு

திருவண்ணாமலை, மே 9- பூம்பூம் மாட்டுக்காரர் குடும்பத்தினர் வீட்டுமனை பட்டா கேட்டு திருவண்ணா மலை கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், ராதாபுரம் கிராமத்தில், பூம்பூம் மாட்டுக்காரர் என்று அழைக்கப்படும், ஆதியன் இன மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக ராதாபுரம் ஏரிக்கரை பகுதியில் குடிசை அமைத்து வசிக்கும் இவர்களுக்கு சொந்தமாக வீட்டுமனை எதுவுமில்லை. மேலும் இவர்களின் வீடுகளுக்கு மேற்கூரை சரியில்லாததால் மழை, வெயில் காலத்தில் அவர்கள் கடும் அவதிப்படுகின்றனர். இதில் சிலருக்கு மாவட்ட நிர்வாகம் வீட்டுமனை பட்டா வழங்கியது. ஆனால் சில நாட்களிலேயே வழங்கிய வீட்டுமனை பட்டாவை ரத்து செய்து விட்டனர். எனவே அனைவருக்கும் இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் கோட்டாட்சியரிடம்  மனு அளித்தனர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், வட்டாரச் செயலாளர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.