டாக்டர் அம்பேத்கரின் 133வது பிறந்தநாளான வெள்ளியன்று (ஏப்.14) அம்பத்தூரில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தொழிலாளர் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.சங்கத்தின் தலைவர் க.பீம்ராவ் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் ஜோசப்சாமுவேல் எம்எல்ஏ, 7வது மண்டலகுழுத் தலைவர் பி.கே.மூர்த்தி, வாரிய தலைமை பொறியாளர் வி.ஜி.ராமசாமி, சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.