பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சிஐடியு மற்றும் அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் காஞ்சிபுரம் மண்டல தலைமை அலுவலகம் முன்பு நடந்த முற்றுகை போராட்டத்திற்கு மண்டலத் தலைவர் என்.நந்தகோபால் தலைமை தாங்கினார். போக்குவரத்து சம்மேளன மாநிலத் துணைத் தலைவர் ஏ.பி.அன்பழகன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.ரமேஷ், காஞ்சி மண்டல பொதுச் செயலாளர் பி.சினிவாசன், துணைப் பொதுச் செயலாளர்கள் எல்.மாயக்கண்ணன், வி.நாராயணன், துணைத் தலைவர் ஆர்.மதுசூதனன், ஓய்வு பெற்றோர் நல சங்கம் காஞ்சி மாவட்ட பொதுச் செயலாளர் இமயவர்மன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.