புதுச்சேரி,மே.14-
தென்னிந்தியாவின் கறையாக புதுச்சேரி உள்ளதால் பாஜக கூட்டணியிலிருந்து முத லமைச்சர் என்.ரங்கசாமி உடனடியாக வெளியேற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
பாஜக அரசியலில் நேர்மை யும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையும் எப்போதும் இருந்ததில்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளைப் பலவீனப்படுத்தி ஆட்சியை கைப்பற்றுவது,கூட்டணி கட்சிகளை பலவீனப்படுத்தி சொந்த பலத்தைப் பெருக்கிக் கொள்வதிலும் வஞ்சகமும், துரோ கமும் கொண்ட ‘ஆக்டோபஸ்’ போன்றது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கர்நாடக மக்கள் பாஜக-வை ஆட்சியில் இருந்து தூக்கி எறிந்துவிட்டனர். இதற்கு முக்கிய காரணம், அந்த கட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகளும், ஊழலும் ஆகும். கர்நாடக மாநில மக்கள் அளித்துள்ள இந்த தீர்ப்பு, பிரத மர் மோடியே தேர்தல் பிரச்சாரத் தின் போது மேற்கொண்ட விஷத்தைக் கக்கிய மதவெறிப் பிரச்சாரத்தை மக்கள் நிராகரித்து விட்டோம் என்பதை காட்டுகிறது. மக்கள் மத்தியில் பாஜக ஆட்சிக்கு எதிராக இருந்த கடும் எதிர்ப்பு உணர்வு, சட்ட மன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற வாய்ப்பளித்திருக் கிறது.
எனவே, மதவெறி, கார்ப் பரேட் கூட்டுக் களவாணித்தனத் தின் மொத்த உருவமான ஒன்றிய பாஜக அரசு, கடந்த 2016 முதல் 2021 வரை ஆட்சியிலிருந்த நாரா யணசாமி தலைமையிலான புதுச்சேரி அரசை அனைத்து வகையிலும் நெருக்கடி கொடுத்து மக்கள் நலத்திட்டங்க ளுக்கு நிதி ஒதுக்காமலும் ஏமாற்றியது.
மக்களால் தேர்வு செய்யப் பட்ட அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல், துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை வைத்து மக்கள் நலத் திட்டங்களை முடக்கியதோடு. ஒரு போட்டி அரசாங்கத்தை புதுச்சேரியில் நடத்தியதை மக்கள் மறந்து விட வில்லை. சட்டமன்ற உறுப் பினர்களை விலைக்கு வாங்கி நாராயணசாமி தலைமையிலான அரசை கவிழ்த்த வரலாறும் புதுச்சேரியில் அரங்கேறியது.
முதல்வர் ரங்கசாமி
தற்போதைய முதல்வர் ரங்கசாமி முதலமைச்சர் பதவியில் இருந்தால் போதும், புதுச்சேரி எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் மக்கள் விருப்பத்திற்கு நேர்மாறாக பாஜக கட்சியோடு கூட்டணி வைத்து உள்ளதை மார்க்சிஸ்ட் கட்சி கடமையோடு சுட்டிகாட்டு கிறது.
எனவே தென்னிந்தியாவின் கறையாக உள்ள பாஜக, புதுச் சேரியில் மட்டும் மக்கள் விருப்பத்திற்கு மாறாக கூட்டணி கட்சியின் ஆதரவோடு அதிகா ரத்தில் இருப்பது அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறது. போராட்டப் பாரம்பரியமும், பல மதங்களைக் கடந்த ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் புதுச்சேரியின் பாரம்பரியத்தை பாதுகாக்க பாஜக கூட்டணியில் இருந்து முதல்வர் ரங்கசாமி உடனே வெளியேற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித் திருக்கிறார்.