விழுப்புரம்,ஏப்.4- விழுப்புரம் மக்களவைத் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமாரை ஆதரித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஒலக்கூர் பகுதியில் பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரத்தில் வேட்பாளர் துரை.ரவிக்குமார் பேசுகையில், பாஜக தனது கூட்டணி கட்சிகளுக்கு உடனடியாக சின்னத்தை வழங்கிவிட்டு நமக்கு சின்னம் தராமல் அலைக்கழித்தது. இம்முறை நமக்கான பானை சின்னத்தை பெறுவதற்கு பெரும் சட்ட போராட்டத்தை தொடர்ந்தோம். இதனிடையே உச்சநீதிமன்றம் சென்று சட்ட போராட்டத்தை மேற்கொண்டு பானை சின்னத்தை பெற்றுள்ளோம். இத்தனை ஆண்டுகள் அரசியல் களத்தில் இயங்கியும் நமக்கென ஒரு சின்னம் இல்லாமல் இருக்கிறோம். இம்முறை நமக்கான சின்னத்தை பெற விசிக இரண்டு இடங்களிலும் மகத்தான வெற்றி பெற வேண்டும். ஏனெனில் இந்த சமூகத்திற்காக தனது வாழ்வையே அர்ப்பணித்த தலை வர் திருமாவின் தியாகத்திற்கு நாம் கொடுக்கும் அங்கீகாரம். எனவே இந்த தேர்தலில் 2 இடங்களிலும் மகத்தான வெற்றி பெற்று தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற்று நிரந்தரமாக பானையை நமது சின்னமாக கிடைக்க வையுங்கள். தமிழ்நாடு முன்னேறுவது மத்தியில் உள்ள பாசிச பாஜக அரசிற்கு பிடிக்க வில்லை. தமிழகத்தின் வளர்ச்சி மீது அவர் களுக்கு பொறாமை அதனை தடுக்கவே நமக்கு நிதி அளிக்காமல் அலைக்கழிக்கிறார் கள். ஆனால் நிதி கிடைக்காத நிலையிலும் திமுக அரசு மக்கள் நலத்திட்டங்களை பாகு பாடு இன்றி அனைவருக்கும் சென்று சேரும்படி செயல்படுத்தி வருகிறது. மக்களுக்காக பாடுபடும் திமுக கூட்டணி 40 இடங்களிலும் மகத்தான வெற்றி பெற்று மோடியை அதிகாரத்திலிருந்து இறங்க செய்வோம். உங்களது வாக்கு மாநில உரிமையை காக்கின்ற, இந்தியாவை காக்கப்போகின்ற வாக்கு என கூறினார். இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலா ளர் சொக்கலிங்கம், திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சீதாபதி, விசிக மாவட்ட செயலாளர் மலைச்சாமி, ஒன்றிய செயலாளர் தமிழ் ஆதவன் மற்றும் மேல்மட்ட பொறுப்பாளர் சு.க.ஆதவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.