‘மோடி - அதானி சாம்ராஜ்ய ஊழல்’ எனும் நூலை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. இந்நூலின் அறிமுகப்படுத்தும் கூட்டம் வியாழனன்று (ஏப்.13) நேரு பூங்காவில் நடைபெற்றது. இளம் கம்யூனிஸ்ட்டுகள் நடத்திய இந்நிகழ்விற்கு மிருதுளா தலைமை தாங்கினார். ‘பாரதி புத்தகாலயம்’ க.நாகராஜன், பத்திரிகையாளர் ஆசிப், சமூக செயற்பாட்டாளர் அர்ச்சனா, ஆ.பிரியதர்ஷினி எம்.சி., அருண் குமார், விக்னேஷ், நந்தினி உள்ளிட்டோர் பேசினர்.