districts

img

பகத்சிங் நினைவு கிரிக்கெட் கோப்பை

சென்னை, மார்ச் 28 - போதையில்லா தமிழ கத்தை உருவாக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஒருகோடி கையெ ழுத்து இயக்கத்தை நடத்தி  வருகிறது. இதன் ஒரு பகுதியாக மயிலாப்பூரில் போதைக்கு எதிராக ‘மாவீரன் பகத்சிங் நினைவு தின கோப்பை-2023’ கிரிக் கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 16 அணிகள் களம் கண்டன. மயிலாப்பூரை சேர்ந்த  பிளாக் கேப்ஸ் அணி கோப் பையை வென்றது. விசாலாட்சி தோட்டத்தை சேர்ந்த வாட் லெவன்ஸ் (வாட் 11ஸ்) அணி இரண்டாம் இடம் இடத்தை பிடித்தது. பிளாக் கேப்ஸ் அணிக்கு கோப்பை, 20 ஆயிரம் ரூபாய் பரிசு தொகையை மயி லாப்பூர் சட்டமன்ற உறுப்பி னர் தா.வேலு வழங்கினார். வாட் லெவன்ஸ் அணிக்கு கோப்பை மற்றும் பரிசு தொகை 17 ஆயிரம் ரூபாயை 123வது வட்ட மாமன்ற உறுப்பினர் எம்.சரஸ்வதி வழங்கினார். சங்கத்தின் மயிலாப்பூர் பகுதிச் செயலாளர்  எஸ்.மகேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த பரி சளிப்பு நிகழ்ச்சியில் சங்கத் தின் மாவட்டத் தலைவர் எம். ஆர்.சுரேஷ், துணைச் செயலாளர் நிவேதா, சென்னை மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் எஸ்.குமார், மலர் மருத்துவ மனை ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஐ.ஆர்.ரவி, வாலிபர் சங்க பகுதி தலை வர் எம்.குமார், பொருளாளர் ஆர்.எஸ்.நாகராஜ், முன் னாள் பகுதிச் செயலாளர் வி.ஜெயச்சந்திரன் உள்ளிட் டோர் பேசினர்.