districts

பெத்தேல் நகர்: மின்சாரத்தை துண்டிக்க நீதிமன்றம் அவகாசம்

சென்னை, ஜன. 31 - பெத்தேல் நகர் பகுதி குடியிருப்புக ளுக்கான மின் இணைப்பை துண்டிப்பதற்கு கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் உள்ளது. எனவே, அங்குள்ள வணிக மற்றும் குடி யிருப்பு சார்ந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற 2015ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்த வில்லை என கூறி ஐ.எச்.சேகர் என்பவர் நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஜன.28 அன்று பொறுப்பு  தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி,  ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கொரோனா கட்டுப்பாடு கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி  வீடுகளுக்கான மின் இணைப்பை துண்டிக்கக  கால அவகாசம் வேண்டுமென்று அரசுத்தரப் பில் கோரப்பட்டது. நீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி பெத்தேல் நகர் மக்கள் சார்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

குடியிருப்போர் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.பிரசாத் ஆஜ ரானார். இதனால் வழக்கு விசாரணயை ஜன.31ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்த னர். இந்த வழக்குகள், திங்களன்று (ஜன.31)  மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், காணொலி காட்சி வாயிலாக ஆஜராகி யிருந்தனர். தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர், 153 கடைகளில் 107 கடை களுக்கான மின் இணைப்பு துண்டிக்கப் பட்டு விட்டது. அனைத்து வணிக நிறுவனங்க ளின் இணைப்பும் ஜன.31 மாலைக்குள் சீல் வைக்கப்பட்டு, மின் இணைப்பு துண்டிக்கப்படும். வீட்டுக்கான இணைப்பு  வணிக பயன்பாட்டுக்கும் பயன்படுத்தப்படு வதால் வணிக நிறுவனங்களின் இணைப்பை துண்டிப்பதில் சிக்கல் உள்ளது என்றார். பெத்தேல் நகர் மக்கள் சார்பில் ஆஜரான  வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத், பெத்தேல்  நகரில் 3,500 குடும்பங்களைச் சேர்ந்த 30  ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்ற னர். இப்பகுதியை மேம்படுத்த 100 கோடி ரூபாயை அரசு செலவு செய்துள்ளது. மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு  வழங்கப்பட்டுள்ளதால் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு  இடையூறு ஏற்படுத்தக் கூடாது.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மேய்க்கால் புறம்போக்கு நிலத்துக்கு பதிலாக, அரசு மாற்று இடம் வழங்கி உள்ளது. பெத்தேல் நகர் பகுதி மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை, குடியிருப்பு நிலமாக வகை மாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்துள்ளார் என்றார். அந்த பரிந்துரை திருப்பி அனுப்பப்பட்டு விட்டதாக  அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரி வித்தார். இதையடுத்து, வணிக நிறுவனங்களுக்கு எதிராக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து நீதிபதிகள் திருப்தி தெரிவித்தனர். மாணவர்களின் படிப்பு, தேர்வுகளை கருத்தில் கொண்டு, குடியிருப்புகளுக்கான மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்ற  உத்தரவை அமல்படுத்த அரசுக்கு அவகாசம்  வழங்கி உத்தரவிட்டனர். அதேசமயம், வணிக நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர நீதிபதி கள் அனுமதியளித்தனர். பெத்தேல் நகரில்  உள்ள மக்களின் ஆவணங்களை அரசு தலைமை வழக்கறிஞருக்கு ஏழு நாட்களில் வழங்க வேண்டும். ஆக்கிரமிப்பு நிலங்களை வரன்முறை செய்ய அனுமதிக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசார ணையை பிப்.8ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.