சென்னை, ஏப். 7 - பெத்தேல் நகரில் உள்ள கட்டிடங்களை அகற்று வது தொடர்பான தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுவை சென்னை உயர் நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. சென்னை ஈஞ்சம் பாக்கம், பெத்தேல் நகரில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த குடி யிருப்புகளை அகற்ற நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவு களை அமல்படுத்தவில்லை என தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தலைமை நீதிபதி அமர்வு விசாரித்து வருகிறது. குடியிருப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தர விட்ட நிலையில் தமிழக அரசு கால அவகாசம் கோரி யது. இந்நிலையில் பெத் தேல் நகர் பாதுகாப்பு பேரவை தரப்பில், 30 ஆண்டுகளுக்கும் மேல் வசிக்கும் சுமார் 30 ஆயிரம் பேரை அகற்றக் கூடாது, புதிய இடத்துக்கு மாறுவதில் சிக்கல்கள் உள்ளதாக கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மெய்க்கால் புறம் போக்கு நிலத்தை நத்தமாக வகை மாற்றம் செய்து பட்டா வழங்க அரசுக்கு உத்தர விடும் வகையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தங்களை இணைக்க வேண்டும் என்றும் கோரி யிருந்தனர். இந்த வழக்கில் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வு, பிரதான வழக்கில் தான் இடையீட்டு மனுதாரக ளாக இணைய முடியும். நீதி மன்ற அவமதிப்பு வழக்கில் இணைக்க முடியாது என்று கூறி கூடுதல் மனுவை தள்ளுபடி செய்தனர்.