சென்னை அடுத்துள்ள தாம்பரம் சானிடோரியம் அரசு டிபி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு ஜன்னல் கம்பிகள் இல்லாத பாதுகாப்பற்ற அறைகளில் படுக்கைகள் உள்ளன. இதனால் நோயாளிகளின் உடமைகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லாத நிலை உள்ளது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தால் விருப்பம் இல்லாவிட்டால் வேறு எங்காவது சிகிச்சைக்கு செல்லுங்கள் என கடிந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது. மேலும் பெட் கவர் மாற்றப்படாமல் அழுக்கு படிந்த நிலையில் உள்ளது. இங்க சிகிச்சை பெறும் நோயாளிக்கு இந்த பராமரிப்பு இன்மை காரணமாக புதுநோய் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் நோயாளிகள் இருக்கின்றனர். உடை மாற்றிக்கொள்வதற்கான மறைவான இடம் இல்லாதது கூடுதல் கொடுமையாக உள்ளது.