districts

img

கோட்டையூரில் அடிப்படைவசதிகளை செய்துதரவேண்டும்: சிபிஎம் வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி, ஏப்.23- அஞ்செட்டி வட்டம், அஞ்செட்டியில் இருந்து 25 கிலோ மீட்டருக்கு தொலைவில் உள்ள கோட்டையூர் கிராமத்தில் 2002 ல் ஊராட்சி ஒன்றியம் சார்பில் 7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சுகாதாரக் கழிப்பிட வளாகம் கடந்த 20 ஆண்டுகளாகவே பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.  இங்கு பெரும்பாலானமக்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழித்துவருகின்றனர். கோட்டையூர் தலித்மக்கள் பகுதிக்கு குடிநீர்வசதி செய்து தர வேண்டும், கழிவு நீர் கால்வாய்கள் கட்டித் தர வேண்டும்,தெருக்களுக்கு சிமெண்ட் சாலை அமைத்துத் தர வேண்டும்என மார்க்சிஸ்ட் கட்சி அஞ்செட்டி வட்டக் குழு சார்பில் வட்டாட்சியருக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.