districts

img

வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள்

சென்னை, ஏப்.12- வாக்குப்பதிவுக்கு இன்னும் 6 நாட்களே இருக்கும் நிலையில் வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள் ளப்பட்டு வருகிறது.  சென்னையில் தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை ஆகிய 3 மக்களவைத்  தொகுதிகளிலும் 16 சட்ட மன்ற தொகுதிகள் வருகின்றன. இந்த தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் தேர்தலுக்காக 3,719 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 600 பதற்றமான சாவடிகள் உள்ளன. சென்னையில் தேர்தல் பணிகளை கண்காணிக்க 299 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த குழுக்களில் இடம் பெற்றுள்ள 16 ஆயிரத்து 500  பணியாளர்களும் வாக்குப் பதிவுக்கு தேவையான பணிகளை தங்களுக்குள்ளேயே பிரித்துக் கொண்டு செய்து வருகிறார்கள். வாக்குப்பதிவு நடை பெறும் மையங்களில் போதிய மின் விளக்கு வசதிகளை செய்து கொடுப்பதற்கான ஆரம்ப  கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பள்ளிக்கூட வகுப்பறைகளே வாக்குப் பதிவு மையங்களாக மாறும் நிலையில் அங்கு  ஏற்கெனவே பொருத்தப்பட்டுள்ள விளக்குகளோடு சேர்த்து கூடுதல் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கழிப்பிட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஓட்டு  போட வரும் வாக்காளர்களின் தாகத்தை தணிக்க  தேவையான குடிநீர் வசதிகளும் செய்து கொடுக்கப்படு கின்றன. மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் சிரமமின்றி ஓட்டு  போடுவதற்கு வசதி யாக சாய்வு தளங்களும் அமைக்கப்பட்டு  வருகின்றன. சக்கர நாற்காலி களில் வரும் வாக்காளர்கள் எளிதாக அதில் ஏறி வாக்குச் சாவடி மையத்துக்குள் சென்று  ஓட்டு போடுவதற்கு உரிய நடவடிக்கைகளை தேர்தல் அலுவலர்கள் மேற் கொள்ள வேண்டும் என்று உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.