districts

வங்கி காசாளர் பண மோசடி பாதித்தவர்களுக்கு பணம் வழங்க சிபிஎம் வலியுறுத்தல்

விழுப்புரம்,ஆக.7-

     வங்கி காசாளர் பண மோசடியால், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு பணம் திரும்ப வழங்க வேண்டும் என்று சிபிஎம் வலி யுறுத்தியுள்ளது.

   விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சிந்தாமணி பகுதியில் இந்தியன் வங்கி உள்ளது. இந்த வங்கியின்  காசாளர் செய்த பண மோசடியால் ஏராள மான வாடிக்கையாளர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.

    இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் விக்கிரவாண்டி ஒன்றியச் செயலாளர் வி.கிருஷ்ணராஜ் தலைமையில் ஒன்றிய குழு உறுப்பினர் ரமேஷ், கிளைச் செயலாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் வங்கி மேலாளரை சந்தித்தனர். அப்போது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பண மோசடியில் ஈடுபட்டு காசாளர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கை யாளர்கள் அவரவர் வங்கி கணக்கில் செலுத்திய பணத்திற்கு ரசீது கொடுத்து காசாளர், அந்த பணத்தை கணக்கில் வரவு வைக்காமல் மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதனால், பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் தற்போது சிறையில் உள்ளார்.

    எனவே, வாடிக்கையாளர்களிடம் ஏமாற்றப்பட்ட பணம் முழுவதையும் திரும்ப கொடுக்க வேண்டும் என்றனர். இது தொடர்பாக வங்கி உயர் அதிகாரிக ளுக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும், ஒருமாதத் திற்குள் பாதிக்கப்பட்ட வாடிக்கை யாளருக்கு பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விக்கிரவாண்டி ஒன்றியச் செயலாளர் வி. கிருஷ்ணராஜ் வெளி யிட்டிருக்கும் அறிக்கையில், “ பாதிக்கப் பட்ட வாடிக்கையாளர்களுக்கு பணம் திரும்ப தர வேண்டும் அல்லது அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இல்லையெனில் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்” என்று எச்சரித்துள்ளனர்.