சென்னை, மார்ச் 10 - சட்டவிரோதமாக செயல்படும் ரேபிடோ செயலியை தடை செய்ய கோரி வெள்ளி யன்று (மார்ச் 10) சென்னையில் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இருச்சக்கர வாகனங்களை மோட்டார் வாகன சட்டப்படி, பொதுப்பயன்பாட்டு வாகனங்களாக இயக்க கூடாது. இதனை மீறி சென்னையில் ரேபிடோ செயலி வாயிலாக இருச்சக்கர வாகனங்கள் பொதுப் பயன்பாட்டு வாகனங்களாக இயக்கப்படு கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, டெல்லி, மகாராஷ்டிரா அரசுகள் ரேபிடோ செயலியை தடை செய்துள்ளன. ஓலா, உபேர் போன்ற செயலிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கின்றன. எனவே, இந்த செயலிகளை தடை செய்ய வலியுறுத்தி, கே.கே.நகரில் உள்ள சென்னை தெற்கு இணை போக்குவரத்து ஆணையர் அலுவல கம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை பல மாநில அரசுகள் அமல்படுத்தாத நிலை யில், தமிழ்நாடு அரசு அமல்படுத்துவதை கைவிட வேண்டும், ஆன்லைன் முறையில் அநியாய அபராதம் விதிக்க கூடாது, ஆர்டிஓ அலுவலகங்களில் நடைபெறும் லஞ்ச, முறைகேடுகளை தடுக்க வேண்டும். உயர் நீதிமன்ற ஆணைப்படி, ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும். ஆட்டோ செயலியை உருவாக்கி அரசே நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஆட்டோ டாக்சி ஓட்டுநர் சங்கத் தலைவர் ஜெ.முகமது அனிபா தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆட்டோ தொழி லாளர் சம்மேளன தலைவர் வி.குமார், செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம், சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.கே.மகேந்திரன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், சென்னை மகாநகர மோட்டார் வாகன தொழிலாளர் சங்க செயல் தலைவர் கே.தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் பா. அன்பழகன், ஆட்டோ சங்க பொதுச் செயலாளர் இ.உமாபதி, கே.கே.நகர் பகுதிச் செயலா ளர் ஏ.முருகன் உள்ளிட்டோர் பேசினர். இதனைத்தொடர்ந்து இணை ஆணையரை சந்தித்து சங்கத் தலைவர்கள் மனு அளித்த னர்.