districts

img

வீடூர் அணையில் தரமற்ற தார் சாலை

விழுப்புரம், பிப். 9- விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வீடூர் அணை யில் தரமற்ற தார் சாலை அமைக்கப்பட்டுள் ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வீடூர் அணையின் கரைப்பகுதியில் ரூ.55 லட்சத்தில் 4.5 கி.மீ. தூரம் தார் சாலைகள் அமைக்கும் பணி கடந்த 3 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த தரமற்றதாக அமைப்பதாகக் கூறி ஆத்திகுப்பம் பகுதி மக்கள் பணியை நிறுத்தினர். மேலும்,  போடப்பட்ட தார்சாலையை கைகளால் பெயர்த்து எடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்து அணையின் பொறியாளர் மற்றும் பணி  ஒப்பந்ததாரர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர் களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, தரமான சாலை அமைப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.