districts

img

கார்கில் நகர் வழியாக மீண்டும் பேருந்துகள் இயக்கம்

சென்னை, நவ. 25- திருவொற்றியூர்- மணலி இணைப்பு சாலையில் பழுதடைந்த மேம்பாலம் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் மணலி செல்லும் பேருந்துகள் 56 டி, 44 பி  ஆகியவை கார்கில் நகர், ராஜாஜிநகர், வெற்றி விநாயகர் நகர் என பக்கி ங்காம் கால்வாய் கரை மீது  சென்று சத்தியமூர்த்தி நகர்  எம்.எப்.எல். வழியாக மணலி சென்றது. இந்நிலையில் கடந்த மழையின்போது இந்த சாலை பழுதடைந்து, எந்த பக்கமும் எந்த வாகனம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து கழகம் பேருந்துகள் இயக்குவதை நிறுத்தி விட்டது. சாலையை சீரமைக்கக் கோரி மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அண்மை யில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தகவல் அறிந்து சம்பவ  இடத்திற்கு வந்த காவல் துறையினர், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை வரவ ழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 2  நாளில் தற்காலிகமாக சாலை அமைத்து, பேருந்து கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், டிசம்பர் 15ஆம் தேதிக்குள் மேம்பாலப் பணிகள் முடி வடையும் என்று உறுதி யளித்தனர். இதையடுத்து தற்காலிக மாக சாலைகள் சீரமைக் கப்பட்டு, வெள்ளிக்கிழமை (நவ. 25) முதல் பேருந்துகள் இயக்கப்பட்டது. சாலை பராமரிப்பு பணியில் சிபிஎம் பகுதிக்குழு உறுப்பினர் அருமைராஜ், கிளைச் செய லாளர் முருகன், கட்டுமான சங்கத்தின் செயலாளர் மணி வண்ணன், இந்திரா நகர் கிராமத் தலைவர் சுரேஷ் ஆகியோரும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.