districts

அயோத்தி, காசிக்கு தமிழகத்தில் இருந்து 3000 பேரை அழைத்துச்செல்லும் ஐஐடி

சென்னை, அக்.25- சென்னை ஐ.ஐ.டி., பனாரஸ் `ஹிந்து பல்கலைக்கழகத்துடன் இணைந்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை அறிவித்துள்ளது.  இதன் ஒருபகுதியாக, தமிழகத்தில் இருந்து 3,000 சிறப்பு விருந்தினர்களை அயோத்தி மற்றும் காசிக்கு அழைத்துச் செல்ல உள்ளதாக சென்னை ஐஐடி தெரி வித்துள்ளது. தமிழகத்துக்கும், காசிக்கும் இடையே உள்ள கல்வி, பொரு ளாதார, சமூக, கலாசார உறவுகளை வெளிக் கொணர இந்த நிகழ்ச்சி நடத்தப் பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தின் 12 இடங்களில் இருந்து கலை, இலக்கியம், ஆன்மீகம், கல்வி உள்ளிட்ட துறைகளை சேர்ந்தவர்க ளை காசிக்கு அழைத்து செல்லப்படு கிறார்கள். சென்னை, கோவை, ராமேஸ்வரம் ஆகிய ஊர்களில் இருந்து ரயில்களில் சிறப்பு பெட்டி அமைக்கப்பட்டு, காசிக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.